search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமன்துறையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு மேலும் 2 பேர் கைது
    X

    ராமன்துறையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு மேலும் 2 பேர் கைது

    ராமன்துறையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் புதுக்கடை அருகே ராமன் துறையைச் சேர்ந்தவர் பேபி ஜாண். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் போஸ்கோ.

    இவர்கள் இருவருக்கும் இடையே மீன்பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறு மற்றும் பங்கு பேரவை தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். 2 நாட்டு வெடி குண்டுகளும் வீசப்பட்டது.

    இதில், யாரும் காயமின்றி உயிர் தப்பினர். இதை தொடர்ந்து நடந்த தாக்குதலில் பாபு, ததேயூஸ், ஜெபின் ஆகிய 3பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து புதுக்கடை போலீசார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மீதும் கல்வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளும் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதட்டமான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த பிரச்சினையில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாகி விட்டதால் ராமன்துறை கிராமமே வெறிச்சோடியது.

    இந்த பிரச்சினையில் தொடர்பு உடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மோதல் தொடர்பாக ஜாண் (வயது 40), மேரி சுந்தரி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 2 பேரை இன்று கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    4-வது நாளாக அங்கு பதட்டம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் அங்குள்ள தெரு வீதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    Next Story
    ×