என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆபாசபடம் எடுத்து மிரட்டி இளம்பெண்களுடன் உல்லாசம்: எட்டயபுரம் போதகர் பற்றி பரபரப்பு தகவல்
Byமாலை மலர்19 Oct 2016 10:51 AM GMT (Updated: 19 Oct 2016 10:51 AM GMT)
நெல்லையில் சிக்கிய எட்டயபுரம் போதகர் பற்றி போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ் (வயது35). இவர் ஒரு கிறிஸ்தவ ‘டிரஸ்ட்’ ஆரம்பித்து ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத போதகம் மற்றும் ஜெபம் செய்து வந்தார்.
இவர் ஜெபம் செய்யும் ஊர்களில் அழகான இளம்பெண்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று அருள் வாக்கு கூறுவது போல கூறி அவர்களை காதல் வலையில் வீழ்த்துவார். பின்னர் வெளியூர் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு அழைத்து சென்று ஆபாச படம் எடுத்து இண்டர்நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் சில பெண்களிடம் ஆபாச படம் எடுத்து மிரட்டி அவர்களிடம் இருந்து நகை- பணத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழையூத்தை சேர்ந்த உஷா (25), கொடியான்குளத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் லீமாகுமாரி (28), பாப்பான்குளத்தை சேர்ந்த அனுசியா (21) ஆகிய இளம்பெண்கள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் புகார் செய்தனர்.
இதன் பேரில் தாழையூத்தை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மத போதகர் ஜோஸ்வா இம்மானுவேல் ராஜை தேடி வந்தனர். நேற்று நள்ளிரவு அவர் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை இன்று தாழையூத்து போலீசார் கைது செய்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது இளம் பெண்களை மயக்கி அவர்களது கற்பை சூறையாடியது மட்டும் அல்லாமல் அவர்களிடம் இருந்து ஏராளமான நகை-பணத்தை ஏமாற்றிய ‘திடுக்’ தகவல்கள் தெரிய வந்தது.
தாழையூத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் தோழி வீட்டுக்கு பாடம் படிக்க செல்வார். அப்போது பக்கத்து வீட்டுக்கு ஜெபம் செய்வதற்காக வந்த போதகர் ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ் அறிமுகமானார்.
அவர் உனக்கு அரசு வேலை கிடைக்க சிறப்பு ஜெபம் செய்ய போவதாக கூறி அடிக்கடி தனிமையில் அழைத்து ஜெபம் செய்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார்.
‘என்னுடன் வெளியூரில் நடக்கும ஜெப கூட்டத்துக்கு வா உடனே உனக்கு வேலை கிடைக்கும்’ என்று சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார். அப்போது தனது செல்போன் மூலம் அந்த இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்தார்.
என்னை பற்றி வெளியில் கூறினால், இந்த ஆபாச படத்தை இண்டர்நெட்டில் போட்டு உன் வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த இளம்பெண் இதை யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய போதகர் அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க செயின், வளையல்களையும் ஏமாற்றி அபகரித்து கொண்டார்.
இது போல மற்றொரு பெண் தனது கணவரை பிரிந்து இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, கணவருடன் சேர்ந்து வாழ ஜெபிப்பதாக கூறி அந்த பெண்ணையும் மயக்கி ஆபாச படம் எடுத்து 15 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்.
மற்றொரு பெண் மிகவும் ஏழ்மையான பெண். அந்த பெண்ணிடம் உன்னை வசதியாக வாழ வைப்பேன் என்று கூறி ஏமாற்றி ஆபாச படம் எடுத்து 3 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார். இது போல பல குடும்ப பெண்களையும் மயக்கி அவர்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார். மத பிரசங்கம், ஜெபம் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இவரிடம் ஏமாந்த பெண்கள் புகார் கொடுக்கலாம் என்றும், அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தாழையூத்து போலீசார் அறிவித்துள்ளார்கள். இதனால் இவர் மீது மேலும் பல மோசடி புகார்கள் வரும் என்றும் கூறப்படுகிறது.
இன்று கைதான ஜோஸ்வா இம்மானுவேல் ராஜை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ் (வயது35). இவர் ஒரு கிறிஸ்தவ ‘டிரஸ்ட்’ ஆரம்பித்து ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத போதகம் மற்றும் ஜெபம் செய்து வந்தார்.
இவர் ஜெபம் செய்யும் ஊர்களில் அழகான இளம்பெண்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று அருள் வாக்கு கூறுவது போல கூறி அவர்களை காதல் வலையில் வீழ்த்துவார். பின்னர் வெளியூர் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு அழைத்து சென்று ஆபாச படம் எடுத்து இண்டர்நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் சில பெண்களிடம் ஆபாச படம் எடுத்து மிரட்டி அவர்களிடம் இருந்து நகை- பணத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழையூத்தை சேர்ந்த உஷா (25), கொடியான்குளத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் லீமாகுமாரி (28), பாப்பான்குளத்தை சேர்ந்த அனுசியா (21) ஆகிய இளம்பெண்கள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் புகார் செய்தனர்.
இதன் பேரில் தாழையூத்தை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மத போதகர் ஜோஸ்வா இம்மானுவேல் ராஜை தேடி வந்தனர். நேற்று நள்ளிரவு அவர் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை இன்று தாழையூத்து போலீசார் கைது செய்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது இளம் பெண்களை மயக்கி அவர்களது கற்பை சூறையாடியது மட்டும் அல்லாமல் அவர்களிடம் இருந்து ஏராளமான நகை-பணத்தை ஏமாற்றிய ‘திடுக்’ தகவல்கள் தெரிய வந்தது.
தாழையூத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் தோழி வீட்டுக்கு பாடம் படிக்க செல்வார். அப்போது பக்கத்து வீட்டுக்கு ஜெபம் செய்வதற்காக வந்த போதகர் ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ் அறிமுகமானார்.
அவர் உனக்கு அரசு வேலை கிடைக்க சிறப்பு ஜெபம் செய்ய போவதாக கூறி அடிக்கடி தனிமையில் அழைத்து ஜெபம் செய்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார்.
‘என்னுடன் வெளியூரில் நடக்கும ஜெப கூட்டத்துக்கு வா உடனே உனக்கு வேலை கிடைக்கும்’ என்று சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார். அப்போது தனது செல்போன் மூலம் அந்த இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்தார்.
என்னை பற்றி வெளியில் கூறினால், இந்த ஆபாச படத்தை இண்டர்நெட்டில் போட்டு உன் வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த இளம்பெண் இதை யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய போதகர் அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க செயின், வளையல்களையும் ஏமாற்றி அபகரித்து கொண்டார்.
இது போல மற்றொரு பெண் தனது கணவரை பிரிந்து இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, கணவருடன் சேர்ந்து வாழ ஜெபிப்பதாக கூறி அந்த பெண்ணையும் மயக்கி ஆபாச படம் எடுத்து 15 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்.
மற்றொரு பெண் மிகவும் ஏழ்மையான பெண். அந்த பெண்ணிடம் உன்னை வசதியாக வாழ வைப்பேன் என்று கூறி ஏமாற்றி ஆபாச படம் எடுத்து 3 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார். இது போல பல குடும்ப பெண்களையும் மயக்கி அவர்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார். மத பிரசங்கம், ஜெபம் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இவரிடம் ஏமாந்த பெண்கள் புகார் கொடுக்கலாம் என்றும், அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தாழையூத்து போலீசார் அறிவித்துள்ளார்கள். இதனால் இவர் மீது மேலும் பல மோசடி புகார்கள் வரும் என்றும் கூறப்படுகிறது.
இன்று கைதான ஜோஸ்வா இம்மானுவேல் ராஜை போலீசார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X