என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஜோ ரூட் விலகல்
Byமாலை மலர்23 Jan 2018 9:40 AM GMT (Updated: 23 Jan 2018 9:40 AM GMT)
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார். #ENGvAUS #ENGvNZ #JoeRoot
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததையொட்டி தற்போது இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. வரும் 26-ந்தேதி அடிலெய்டில் 4-வது போட்டியும், 28-ந்தேதி பெர்த்தில் 5-வது போட்டியும் நடக்கிறது.
அதன்பின் 7-ந்தேதி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 18-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் விலகியுள்ளார். ஆனால் பிப்ரவரி 25-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘எல்லா போட்டிகளிலும் விளையாடுவதற்காகவே நான் இங்கு வந்தேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை நான் மிகவும் நேசிக்கிறேன். கிரிக்கெட் ஆட்டத்தை தவற விடுவதை நான் விரும்பவில்லை. நான் விலகுவது குறித்து பயிற்சியாளரிடம் பேசினேன். இந்த சீசனில் இன்னும் ஏராளமான போட்டிகள் உள்ளன. இது ஒரு சிறிய இடைவேளிதான்’’ என்றார்.
ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. வரும் 26-ந்தேதி அடிலெய்டில் 4-வது போட்டியும், 28-ந்தேதி பெர்த்தில் 5-வது போட்டியும் நடக்கிறது.
அதன்பின் 7-ந்தேதி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 18-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் விலகியுள்ளார். ஆனால் பிப்ரவரி 25-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘எல்லா போட்டிகளிலும் விளையாடுவதற்காகவே நான் இங்கு வந்தேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை நான் மிகவும் நேசிக்கிறேன். கிரிக்கெட் ஆட்டத்தை தவற விடுவதை நான் விரும்பவில்லை. நான் விலகுவது குறித்து பயிற்சியாளரிடம் பேசினேன். இந்த சீசனில் இன்னும் ஏராளமான போட்டிகள் உள்ளன. இது ஒரு சிறிய இடைவேளிதான்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X