என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார், யுகி பாம்ப்ரி தோல்வி
Byமாலை மலர்4 Jan 2018 2:52 AM GMT (Updated: 4 Jan 2018 2:52 AM GMT)
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் ராம்குமார், யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தனர்.
புனே:
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராம்குமார், முன்னாள் சாம்பியன் மரின் சிலிச்சுடன் (குரோஷியா) நேற்று மோதினார். மணிக்கு அதிகபட்சமாக 223 கிலோமீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டு மிரட்டிய அனுபவம் வாய்ந்த மரின் சிலிச் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ராம்குமாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் பியாரே ஹக்ஸ் ஹெர்பர்ட்டிடம் (பிரான்ஸ்) போராடி வீழ்ந்தார். இத்துடன் ஒற்றையரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
இரட்டையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டவர்களான லியாண்டர் பெயஸ்- புராவ் ராஜா இணையை வெளியேற்றியது.
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ராம்குமார், முன்னாள் சாம்பியன் மரின் சிலிச்சுடன் (குரோஷியா) நேற்று மோதினார். மணிக்கு அதிகபட்சமாக 223 கிலோமீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டு மிரட்டிய அனுபவம் வாய்ந்த மரின் சிலிச் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் ராம்குமாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் பியாரே ஹக்ஸ் ஹெர்பர்ட்டிடம் (பிரான்ஸ்) போராடி வீழ்ந்தார். இத்துடன் ஒற்றையரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
இரட்டையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டவர்களான லியாண்டர் பெயஸ்- புராவ் ராஜா இணையை வெளியேற்றியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X