search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது அதெலிடிகோ டீ கொல்கத்தா
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது அதெலிடிகோ டீ கொல்கத்தா

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் அதெலிடிகோ டீ கொல்கத்தா எப்.சி. அணி, மும்பை சிட்டி எப்.சி.யை 1-0 என வீழ்த்தி வெற்றி பெற்றது.

    கொச்சி:

    10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய 27-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - அதெலிடிகோ டீ கொல்கத்தா எப்.சி. அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டி தொடங்குவதற்கு முன்னர், மும்பை சிட்டி எப்.சி. அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு டிரா, இரண்டு தோல்வியுடன் ஐந்தாவது இடத்தில் இருந்தது. அதெலிடிகோ டீ கொல்கத்தா எப்.சி. அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு தோல்வி, இரண்டு டிராவுடன் கடைசி இடத்தில் இருந்தது.



    விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றைய போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 54-வது நிமிடம் கொல்கத்தாவின் ராபின் சிங் கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் எவ்வளவு முயற்சித்தும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தாவுக்கு இது முதல் வெற்றியாகும். இந்த போட்டியில் வென்ற கொல்கத்தா 5 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியது.



    அடுத்ததாக 20-ம் தேதி கவுஹாத்தியில் நடைபெறும் லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்.சி - நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×