என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்: உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த ஜடேஜா
Byமாலை மலர்15 Dec 2017 9:43 PM GMT (Updated: 15 Dec 2017 9:43 PM GMT)
குஜராத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தியுள்ளார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ளது சவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம். இங்கு ஜாம்நகர் மற்றும் அம்ரேலி ஆகிய அணிகளுக்கு இடையில் மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் ஜாம்நகர் அணி முதலில் விளையாடியது. ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இதையடுத்து, அந்த அணியின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.
ஆட்டத்தின் 15வது ஓவரை அம்ரேலி அணியின் நீலம் வம்ஜா வீசினார். அந்த ஓவரின் 6 பந்துகளையும் ஜடேஜா சிக்சர் அடித்து அசத்தினார்.
போட்டியின் 19-வது ஓவரில் ஜடேஜா ரன் அவுட்டானார். அவர் 69 பந்துகளை சந்தித்து 154 ரன்கள் எடுத்தார். இதில் 10 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில், ஜாம்நகர் மாவட்ட அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அம்ரேலி அணி களமிறங்கியது. ஆனால், யாரும் நிலைத்து நின்று ஆடாததால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து, ஜாம்நகர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஏற்கனவே இந்திய அணி சார்பில் ரவிசாஸ்திரி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அமைந்துள்ளது சவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம். இங்கு ஜாம்நகர் மற்றும் அம்ரேலி ஆகிய அணிகளுக்கு இடையில் மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் ஜாம்நகர் அணி முதலில் விளையாடியது. ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இதையடுத்து, அந்த அணியின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.
ஆட்டத்தின் 15வது ஓவரை அம்ரேலி அணியின் நீலம் வம்ஜா வீசினார். அந்த ஓவரின் 6 பந்துகளையும் ஜடேஜா சிக்சர் அடித்து அசத்தினார்.
போட்டியின் 19-வது ஓவரில் ஜடேஜா ரன் அவுட்டானார். அவர் 69 பந்துகளை சந்தித்து 154 ரன்கள் எடுத்தார். இதில் 10 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில், ஜாம்நகர் மாவட்ட அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அம்ரேலி அணி களமிறங்கியது. ஆனால், யாரும் நிலைத்து நின்று ஆடாததால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து, ஜாம்நகர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஏற்கனவே இந்திய அணி சார்பில் ரவிசாஸ்திரி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X