search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 வயது இந்திய சிறுவன் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டிக்கு தகுதி
    X

    15 வயது இந்திய சிறுவன் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டிக்கு தகுதி

    இந்தியாவின் 15 வயது சிறுவனான ஷபாத் பர்தவாஜ் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
    இந்தியாவைச் சேர்ந்த 15 வயது சிறுவனான ஷபாத் பர்தவாஜ் கடந்த மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதித்தவர்.

    இதனால் மதிப்பிற்குரிய சர்வதேச சூட்டிங் பெடரேசன் சார்பில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடரில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளார். அங்குர் மிட்டல் மற்றும் சங்ராம் தஹியா ஆகியோருடன் இணைந்து டபுள் ட்ராப் பிரிவில் பங்கேற்கிறார்.



    ஜித்து ராய், ரவி குமார், பூஜா கத்கர், அமன்ப்ரீத் சிங், மேகனா சஜனார், தீப் குமார், ராய், ஹீனா சித்து ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.

    இந்த தொடர் டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் சூட்டிங் ரேஞ்சில் அடுத்த மாதம் நடக்கிறது. ஷபாத் பர்தவாஜ் மாஸ்கோவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அணிகள் பிரிவில் தங்க பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×