என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொந்த மண்ணில் வங்கப் புலிகளை தோற்கடிக்க முடியாது: ஆஸி.க்கு சாஹிப் அல் ஹசன் எச்சரிக்கை
Byமாலை மலர்22 Aug 2017 12:35 PM GMT (Updated: 22 Aug 2017 12:35 PM GMT)
சொந்த மண்ணில் வங்கப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று வங்காளதேச அணி ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் ஆஸி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காள தேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 27-ந்தேதி டாக்கா மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக வங்காள தேச அணி தயாராகி வருகிறது.
இந்நிலையில் சொந்த மண்ணில் வங்கப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று அந்த அணியின் ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சாஹிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘முன்னதாக பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது டிரா செய்தாலே போதும் என்ற மனநிலையில்தான் விளையாடுவோம். ஐந்து நாட்கள் எப்படியாவது தாக்குப்பிடித்து டிரா செய்துவிட வேண்டும் என்று விரும்புவோம். ஆனால், டிரா என்ற முடிவை நாங்கள் எட்டியது கிடையாது.
அப்புறம் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும் என்று விரும்பினோம். இந்த மனநிலை மாற்றம் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்தது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்காக நீணட நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இது நம்ப முடியாதது.
இந்த அளவிற்கு வங்காள தேச அணி முன்னேறும் என்ற பெரும்பாலான மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம்தான் நம்பிக்கையை பெற முடியும். தற்போது எங்களது நம்பிக்கையில் எந்த குறைவும் இல்லை. எங்களது சொந்த மண்ணில் நாங்கள் தோற்றகடிக்க முடியாத அணி என்று உணர்கிறோம். எங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள் என்பது எங்களுக்கு பிரச்சினை கிடையாது’’ என்றார்.
இந்நிலையில் சொந்த மண்ணில் வங்கப் புலிகளை தோற்கடிக்க முடியாது என்று அந்த அணியின் ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சாஹிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘முன்னதாக பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போது டிரா செய்தாலே போதும் என்ற மனநிலையில்தான் விளையாடுவோம். ஐந்து நாட்கள் எப்படியாவது தாக்குப்பிடித்து டிரா செய்துவிட வேண்டும் என்று விரும்புவோம். ஆனால், டிரா என்ற முடிவை நாங்கள் எட்டியது கிடையாது.
அப்புறம் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும் என்று விரும்பினோம். இந்த மனநிலை மாற்றம் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்தது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்காக நீணட நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இது நம்ப முடியாதது.
இந்த அளவிற்கு வங்காள தேச அணி முன்னேறும் என்ற பெரும்பாலான மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம்தான் நம்பிக்கையை பெற முடியும். தற்போது எங்களது நம்பிக்கையில் எந்த குறைவும் இல்லை. எங்களது சொந்த மண்ணில் நாங்கள் தோற்றகடிக்க முடியாத அணி என்று உணர்கிறோம். எங்களுக்கு எதிராக யார் விளையாடுகிறார்கள் என்பது எங்களுக்கு பிரச்சினை கிடையாது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X