என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்கேரிய ஓபன் டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடி கோஷ்-சத்தியன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்19 Aug 2017 12:53 PM GMT (Updated: 19 Aug 2017 12:53 PM GMT)
பல்கேரிய ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சவுமியாஜித் கோஷ்-ஜி.சத்தியன் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
புதுடெல்லி:
பல்கேரியாவின் பனாகிரிஷ்தே நகரில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவுமியாஜித் கோஷ்-ஜி.சத்தியன் மற்றும் அந்தோணி அமல் ராஜ்-சனில் ஷெட்டி ஜோடிகள் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
இரு ஜோடிகளும் அரையிறுதியில் இன்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கோஷ்-சத்தியன் ஜோடி 11-3, 12-10, 11-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கோஷ்-சத்தியன் ஜோடி, ஜப்பானின் உதா-மகரு யோஷிமுரா ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
முன்னதாக நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனிகா பத்ரா-மவுனா தாஸ் ஜோடி மதில்டா எக்கோம்-ஜார்ஜினா போத்தா ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செக் குடியரசு வீரர் தாமஸ் போனன்ஸ்கியிடம் தோல்வியடைந்த இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பல்கேரியாவின் பனாகிரிஷ்தே நகரில் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவுமியாஜித் கோஷ்-ஜி.சத்தியன் மற்றும் அந்தோணி அமல் ராஜ்-சனில் ஷெட்டி ஜோடிகள் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
இரு ஜோடிகளும் அரையிறுதியில் இன்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கோஷ்-சத்தியன் ஜோடி 11-3, 12-10, 11-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கோஷ்-சத்தியன் ஜோடி, ஜப்பானின் உதா-மகரு யோஷிமுரா ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
முன்னதாக நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனிகா பத்ரா-மவுனா தாஸ் ஜோடி மதில்டா எக்கோம்-ஜார்ஜினா போத்தா ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செக் குடியரசு வீரர் தாமஸ் போனன்ஸ்கியிடம் தோல்வியடைந்த இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X