என் மலர்
செய்திகள்

இலங்கை அணியில் குசால் பெரேராவிற்குப் பதிலாக தனஞ்ஜெயா டி சில்வா சேர்ப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கை அணியில் காயம் ஏற்பட்டுள்ள குசால் பெரேராவிற்குப் பதிலாக தனஞ்ஜெயா டி சில்வா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த 8-ந்தேதி இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணியின் 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பெரேரா 44 பந்தில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரமாக இருந்ததால், மாற்று வீரரை தேர்வு செய்ய இலங்கை முடிவு செய்தது.
அதன்படி அவருக்குப் பதிலாக தனஞ்ஜெயா டி சில்வாவை தேர்வு செய்தது. இதற்கு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியின் தொழில்நுட்ப குழு சம்மதம் தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நாளைமறுநாள் கார்டிஃபில் நடைபெறும் போட்டியில் தனஞ்ஜெயா டி சில்வா இடம்பெறுவார். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
25 வயதாகும் தனஞ்ஜெயா டி சில்வா 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 334 ரன்கள் எடுத்ததுடன், நான்கு விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணியின் 4-வது வீரராக களம் இறங்கிய குசால் பெரேரா 44 பந்தில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரமாக இருந்ததால், மாற்று வீரரை தேர்வு செய்ய இலங்கை முடிவு செய்தது.
அதன்படி அவருக்குப் பதிலாக தனஞ்ஜெயா டி சில்வாவை தேர்வு செய்தது. இதற்கு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியின் தொழில்நுட்ப குழு சம்மதம் தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக நாளைமறுநாள் கார்டிஃபில் நடைபெறும் போட்டியில் தனஞ்ஜெயா டி சில்வா இடம்பெறுவார். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
25 வயதாகும் தனஞ்ஜெயா டி சில்வா 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 334 ரன்கள் எடுத்ததுடன், நான்கு விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.
Next Story






