search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்ச் ஓபன்: முதல்நிலை வீராங்கனை கெர்பர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி
    X

    பிரெஞ்ச் ஓபன்: முதல்நிலை வீராங்கனை கெர்பர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி

    பிரெஞ்ச் ஓபனில் முதல்நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் (ரோலண்ட் கார்ரோஸ்) பாரிஸ் நகரில் இன்று தொடங்கியது.

    முதல் சுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர். இந்த தொடருக்கான தரவரிசை பெறாத ரஷியாவின் எகாடெரினா மகரோவாவை எதிர் கொண்டார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் கெர்பர் 2-6, 2-6 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்றோடு பிரெஞ்ச் ஓபனில் இருந்து வெளியேறினார்.


    கெர்பரை வீழ்த்திய ரஷிய வீராங்கனை எகாடெரினா மகரோவா

    இதற்கு முன் 2004-ரல் ஜஸ்டின் ஹெனின், 2014-ல் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. கெர்பர் இதுபோன்று கடந்த ஆண்டும் தோல்வியடைந்துள்ளார்.

    கத்திக்குத்தால் சுமார் 6 மாதங்கள் விளையாடமல் இருந்து குரோஷியாவின் குவிட்டோவா முதல் சுற்றில் 6-3, 6-2 என வெற்றி பெற்று அசத்தினார்.
    Next Story
    ×