என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர், வீராங்கனை வெற்றி
Byமாலை மலர்27 April 2017 4:02 AM GMT (Updated: 27 April 2017 4:02 AM GMT)
சென்னையில் நேற்று தொடங்கிய இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை :
இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. 30-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-2, 11-3, 11-5 என்ற நேர்செட்டில் சிங்கப்பூர் வீரர் பென்டிட் ஷானை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் வேலவன் செந்தில்குமார், விக்ரம் மல்கோத்ரா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா 11-4, 11-8, 11-8 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் ஷோ யுராவை வீழ்த்தினார்.
இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. 30-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 12 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-2, 11-3, 11-5 என்ற நேர்செட்டில் சிங்கப்பூர் வீரர் பென்டிட் ஷானை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் வேலவன் செந்தில்குமார், விக்ரம் மல்கோத்ரா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா 11-4, 11-8, 11-8 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் ஷோ யுராவை வீழ்த்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X