search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். தொடக்க விழாவில் தெண்டுல்கர், கங்குலி உள்பட 5 வீரர்களை கவுரவிக்க முடிவு
    X

    ஐ.பி.எல். தொடக்க விழாவில் தெண்டுல்கர், கங்குலி உள்பட 5 வீரர்களை கவுரவிக்க முடிவு

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழாவில் தெண்டுல்கர், கங்குலி, டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், ஷேவாக் ஆகியோரை கவுரவிக்க உள்ளதாக ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஐதராபாத்தில் வருகிற 5-ந்தேதி நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழாவின் போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண், ஷேவாக் ஆகியோரை கவுரவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.



    கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியினர், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்தும் சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு போட்டிக்கு முன்பாக நிதியை ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொண்டனர். மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒவ்வொரு ஐ.பி.எல். ஆட்டத்தையும் நடத்த செலவுத் தொகையாக ரூ.60 லட்சம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×