என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தியோதர் டிராபி கிரிக்கெட்: தமிழ்நாடு அணி சாம்பியன்
Byமாலை மலர்29 March 2017 12:16 PM GMT (Updated: 29 March 2017 12:16 PM GMT)
தியோதர் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ரெட் அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
விசாகப்பட்டினம்:
இந்தியா ரெட், இந்தியா ப்ளூ, விஜய் ஹசாரே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
அவ்வகையில், இந்தியா ரெட் அணி இந்தியா ப்ளூ மற்றும் தமிழ்நாடு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்தியா ப்ளூ அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால், இந்தியா ரெட், தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், சாம்பியன் கோப்பையை கைப்பற்ற தமிழ்நாடு அணி, இந்தியா ரெட் அணியுடன் மோதியது.
டாஸ் வென்று முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 126 ரன்கள் விளாசினார். ஜெகதீசன் 55 ரன்கள் சேர்த்தார். இந்தியா ரெட் தரப்பில் தவால் குல்கர்னி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ரெட் அணியின் துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 4-வது ஓவரில் 15 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து சற்று அதிரடியாக ஆடிய தவான் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். நம்பிக்கை அளித்த குர்கீரத் சிங் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மணீஷ் பாண்டே (32), ஹர்பிரீத் சிங் (36), அக்சய் கார்னிவர் (29) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 261 ரன்களில் அந்த அணி சுருண்டது.
இதனால், தமிழ்நாடு அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தியோதர் கோப்பையை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அணி, விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றி 3 வாரங்களுக்குப் பிறகு இப்போது தியோதர் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.
இந்தியா ரெட், இந்தியா ப்ளூ, விஜய் ஹசாரே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோத வேண்டும். இதில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
அவ்வகையில், இந்தியா ரெட் அணி இந்தியா ப்ளூ மற்றும் தமிழ்நாடு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்தியா ப்ளூ அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால், இந்தியா ரெட், தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், சாம்பியன் கோப்பையை கைப்பற்ற தமிழ்நாடு அணி, இந்தியா ரெட் அணியுடன் மோதியது.
டாஸ் வென்று முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 126 ரன்கள் விளாசினார். ஜெகதீசன் 55 ரன்கள் சேர்த்தார். இந்தியா ரெட் தரப்பில் தவால் குல்கர்னி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ரெட் அணியின் துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 4-வது ஓவரில் 15 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து சற்று அதிரடியாக ஆடிய தவான் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். நம்பிக்கை அளித்த குர்கீரத் சிங் 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மணீஷ் பாண்டே (32), ஹர்பிரீத் சிங் (36), அக்சய் கார்னிவர் (29) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 261 ரன்களில் அந்த அணி சுருண்டது.
இதனால், தமிழ்நாடு அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தியோதர் கோப்பையை கைப்பற்றியது. ஆட்டநாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அணி, விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றி 3 வாரங்களுக்குப் பிறகு இப்போது தியோதர் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X