search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் காரணமாக ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலி ஆடுவது சந்தேகம்
    X

    காயம் காரணமாக ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலி ஆடுவது சந்தேகம்

    தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலி ஆடுவது சந்தேகம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
    தரம்சாலா:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில், இந்திய கேப்டன் விராட் கோலி முதல் நாள் ஆட்டத்தின் போது காயமடைந்தார். எல்லைக்கோட்டை நோக்கி ஓடிய பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயத்திற்கு சிகிச்சை எடுத்தாலும் 4-வது டெஸ்டில் அவர் ஆடவில்லை.



    இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் விராட் கோலி ஆடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நூறு சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாடுவேன் என சில வாரங்களுக்கு முன் கோலி தெரிவித்தார். இதனால் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் ஐதாராபாத்- பெங்களூர் ஆரம்ப போட்டியில் கோலி விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
    Next Story
    ×