search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை: பிசிசிஐ அறிவிப்பு
    X

    டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை: பிசிசிஐ அறிவிப்பு

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என, பிசிசிஐ அறிவித்துள்ளது.
    புது டெல்லி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இன்று வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பெற்றுள்ளது.

    இந்த நிலையில், டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.



    இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தொடரை வென்ற வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், தலைமை பயிற்சியாளருக்கு 25 லட்சம் ரூபாயும், ஊழியர்களுக்கு 15 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்” என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×