search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் கால்பந்து வீரர் மலப்புரம் செக்கு காலமானார்
    X

    முன்னாள் கால்பந்து வீரர் மலப்புரம் செக்கு காலமானார்

    இந்தியாவின் முன்னணி கிளப்புகளில் ஆடிய முன்னாள் கால்பந்து வீரர் மலப்புரம் செக்கு கேரளாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் மக்கராபறம்பு என்ற ஊரில் வசித்து வந்த 77 வயதான மலப்புரம் செக்கு, இந்தியாவில் நடக்கும் முக்கிய கால்பந்து ஆட்டங்களான சந்தோஷ் டிராபி, துரந்தோ தொடர் போன்ற போட்டிகளில் கேரள அணியின் சார்பில் விளையாடி உள்ளார். பின்கள தடுப்பாட்டக்காரரான செக்கு 1969 முதல் 1973 வரை கேரள மாநில கால்பந்து அணியில் களமிறங்கி பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

    பல்வேறு கிளப் கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள செக்கு, உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை தனது இல்லத்தில் மரணமடைந்தார்.
    Next Story
    ×