என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது
Byமாலை மலர்27 March 2017 11:34 AM GMT (Updated: 27 March 2017 11:34 AM GMT)
17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வரும் அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான தயாரிப்பு பணிகளில் சர்வதேச அணிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பிபாவின் 21 உறுப்பினர்கள் கொண்ட குழுவானது, இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்களை ஆய்வு செய்தது. டெல்லி, கோவா, கொச்சி, நவி மும்பை, கவுகாத்தி ஆகிய 5 மைதானங்களை ஆய்வு செய்த பின்னர், கடைசியாக இன்று கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்போது, கொல்கத்தா மைதானம் அவர்களுக்கு திருப்தி அளித்துள்ளது.
இந்நிலையில், இறுதிப்போட்டி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் அக்டோபர் 28-ம் தேதி நடைபெறும் என போட்டி இயக்குனர் ஜேவியர் செப்பி அறிவித்துள்ளார். மேலும், இந்த மைதானத்தில் 6 லீக் ஆட்டங்கள், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஒரு ஆட்டம், காலிறுதியில் ஒரு ஆட்டம், மூன்றாம் இடத்துக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 10 போட்டிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
துவக்க ஆட்டம் அக்டோபர் 6-ம் தேதி நவி மும்பையில் நடைபெறும். அரையிறுதி ஆட்டங்கள் கவுகாத்தியிலும், நவி மும்பையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) சார்பில் 17 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான தயாரிப்பு பணிகளில் சர்வதேச அணிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் பிபாவின் 21 உறுப்பினர்கள் கொண்ட குழுவானது, இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்களை ஆய்வு செய்தது. டெல்லி, கோவா, கொச்சி, நவி மும்பை, கவுகாத்தி ஆகிய 5 மைதானங்களை ஆய்வு செய்த பின்னர், கடைசியாக இன்று கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்போது, கொல்கத்தா மைதானம் அவர்களுக்கு திருப்தி அளித்துள்ளது.
இந்நிலையில், இறுதிப்போட்டி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் அக்டோபர் 28-ம் தேதி நடைபெறும் என போட்டி இயக்குனர் ஜேவியர் செப்பி அறிவித்துள்ளார். மேலும், இந்த மைதானத்தில் 6 லீக் ஆட்டங்கள், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஒரு ஆட்டம், காலிறுதியில் ஒரு ஆட்டம், மூன்றாம் இடத்துக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 10 போட்டிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
துவக்க ஆட்டம் அக்டோபர் 6-ம் தேதி நவி மும்பையில் நடைபெறும். அரையிறுதி ஆட்டங்கள் கவுகாத்தியிலும், நவி மும்பையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X