search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - ஆஸ்திரேலியா இறுதி டெஸ்ட் போட்டி: 332 ரன்களுக்கு இந்தியா ஆல் -அவுட்
    X

    இந்தியா - ஆஸ்திரேலியா இறுதி டெஸ்ட் போட்டி: 332 ரன்களுக்கு இந்தியா ஆல் -அவுட்

    தர்மசாலாவில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 332 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது.
    தர்மசாலா:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் (111) அடித்தார். வார்னர், வடே அரைசதம் அடித்தனர்.

    இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடினர். 

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்த நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. ஜடேஜா 63 ரன்களிலும், சாஹா 31 ரன்களிலும் அவுட் ஆனார்கள். பின்னர் களமிறங்கிய வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து ஆடாததால் இந்திய அணி 332 ரன்களில் ஆட்டமிழந்தது. 



    ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ்  3 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் மற்றும் ஓ கீபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆட உள்ளது.
    Next Story
    ×