என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு தான் நெருக்கடி: ஹேசில்வுட்
Byமாலை மலர்24 March 2017 4:21 AM GMT (Updated: 24 March 2017 4:21 AM GMT)
நாளை நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு தான் நெருக்கடி உள்ளதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் பேட்டியளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முடிவு கிடைக்கக்கூடிய ஆடுகளமாக தரம்சாலா இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இந்திய அணி தொடரை கைப்பற்ற இங்கு வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அதனால் முடிவு கிடைக்கக்கூடிய வகையிலேயே ஆடுகளத்தை தயாரித்து இருப்பார்கள். இப்போது நெருக்கடி எல்லாமே இந்தியாவுக்கு தான்.
நாங்கள் டிரா செய்தாலே கோப்பையை தக்க வைக்க முடியும். ஆனால் நாங்கள் வெற்றி பெறவே விரும்புகிறோம். 2-1 என்ற கணக்கில் இந்திய மண்ணில் தொடரை வெல்வது அரிதாக நிகழக்கூடியதாகும். வேகமும், பவுன்சும் கூடிய ஆடுகளமாக இது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஒவ்வொரு முறையும் விராட் கோலி (5 இன்னிங்சில் 46 ரன்கள்) ரன் எடுக்காத போதெல்லாமல், அடுத்த போட்டியில் பெரிய இன்னிங்சை நெருங்கி விடுவார். அவர் தரமான ஒரு ஆட்டக்காரர். ஆனால் அடுத்த போட்டியில் அது மாதிரி நடக்காது என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஹேசில்வுட் கூறினார்.
முடிவு கிடைக்கக்கூடிய ஆடுகளமாக தரம்சாலா இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இந்திய அணி தொடரை கைப்பற்ற இங்கு வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அதனால் முடிவு கிடைக்கக்கூடிய வகையிலேயே ஆடுகளத்தை தயாரித்து இருப்பார்கள். இப்போது நெருக்கடி எல்லாமே இந்தியாவுக்கு தான்.
நாங்கள் டிரா செய்தாலே கோப்பையை தக்க வைக்க முடியும். ஆனால் நாங்கள் வெற்றி பெறவே விரும்புகிறோம். 2-1 என்ற கணக்கில் இந்திய மண்ணில் தொடரை வெல்வது அரிதாக நிகழக்கூடியதாகும். வேகமும், பவுன்சும் கூடிய ஆடுகளமாக இது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஒவ்வொரு முறையும் விராட் கோலி (5 இன்னிங்சில் 46 ரன்கள்) ரன் எடுக்காத போதெல்லாமல், அடுத்த போட்டியில் பெரிய இன்னிங்சை நெருங்கி விடுவார். அவர் தரமான ஒரு ஆட்டக்காரர். ஆனால் அடுத்த போட்டியில் அது மாதிரி நடக்காது என்று நம்புகிறேன்.
இவ்வாறு ஹேசில்வுட் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X