என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புஜாரா, சகாவின் அபார ஆட்டத்தால் தேனீர் இடைவேளை வரை இந்தியா 52 ரன்கள் முன்னிலை
Byமாலை மலர்19 March 2017 9:09 AM GMT (Updated: 19 March 2017 9:09 AM GMT)
ராஞ்சி டெஸ்டில் புஜாரா, சகா ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 52 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. சகா சதம் விளாசினார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவை விட 91 ரன்கள் பின்தங்கியிருந்தது. புஜாரா 130 ரன்னுடனும், சகா 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பலை போல் ஆடுகளத்துடன் ஒட்டிக் கொண்டனர். இந்த வி்க்கெட் பிரிக்க ஆஸ்திரேலியா எவ்வளவு முயற்சி செய்தும் பலனிக்கவில்லை. நான்கு ரிவியூ வாய்ப்பையும் பயன்படுத்தி வீணாக்கியது.
4-வது நாள் மதிய உணவு இடைவேளை இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடியது. அதன்பின்பும் தற்போது தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். இந்தியா தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 190 ரன்னுடனும், சகா 99 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சகா ஒரு ரன் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பலை போல் ஆடுகளத்துடன் ஒட்டிக் கொண்டனர். இந்த வி்க்கெட் பிரிக்க ஆஸ்திரேலியா எவ்வளவு முயற்சி செய்தும் பலனிக்கவில்லை. நான்கு ரிவியூ வாய்ப்பையும் பயன்படுத்தி வீணாக்கியது.
4-வது நாள் மதிய உணவு இடைவேளை இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடியது. அதன்பின்பும் தற்போது தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் விளையாடினார்கள். இந்தியா தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 190 ரன்னுடனும், சகா 99 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. சகா ஒரு ரன் எடுத்து தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X