என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ.-யின் திலிப் சர்தேசாய் விருது: பாலி உம்ரிகர் விருது பெறுகிறார் கோலி
Byமாலை மலர்1 March 2017 4:10 PM GMT (Updated: 1 March 2017 4:10 PM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ.-யின் திலிப் சர்தேசாய் விருதும், கேப்டன் விராட் கோலிக்கு பாலி உம்ரிகர் விருதும் வழங்கப்படுகிறது.
மும்பை:
இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.ஐ.சி. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோலி பெறுகிறார். இதன்மூலம் மூன்றாவது முறையாக இந்த விருதை அவர் பெறுகிறார். மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு திலிப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதை பெற உள்ளார்.
முன்னதாக, ரஜீந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் ஆகியோர் கர்னர் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பெண்கள் அணி கேப்டன சாந்தா ரங்கசாமி பி.சி.சி.ஐ. வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இதேபோல் உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பி.சி.சி.ஐ. விருது வழங்கும் விழா பெங்களூரில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.ஐ.சி. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து வருகிறது.
இதில், சீனியர் பிரிவில் சிறந்த ஆட்டக்காரர்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதான பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோலி பெறுகிறார். இதன்மூலம் மூன்றாவது முறையாக இந்த விருதை அவர் பெறுகிறார். மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு திலிப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதை பெற உள்ளார்.
முன்னதாக, ரஜீந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் ஆகியோர் கர்னர் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பெண்கள் அணி கேப்டன சாந்தா ரங்கசாமி பி.சி.சி.ஐ. வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இதேபோல் உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பி.சி.சி.ஐ. விருது வழங்கும் விழா பெங்களூரில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X