என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லா லிகா: மெஸ்சியின் கடைசி நேர கோலால் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது பார்சிலோனா
Byமாலை மலர்27 Feb 2017 10:31 AM GMT (Updated: 27 Feb 2017 10:31 AM GMT)
லா லிகா தொடரில் மெஸ்சியின் கடைசி நேர கோலால் அட்லெடிகோ மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தியது பார்சிலோனா. இதனால் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனா - அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2-வது பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டன. ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ரஃபினா கோல் அடித்தார். லூயிஸ் சுவாரஸ் பாஸ் செய்த பந்தை ரஃபினா கோலாக மாற்றினார்.
கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட சோகத்தி்ல் சுவாரஸ்
இந்த கோல் அடித்த 6-வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் அட்லெடிகோ அணியின் டியாகோ காடின் தலையால் முட்டி கோல் அடித்தார். இடது பக்கம் கார்னர் அருகில் இருந்து கொகே தூக்கியடித்த பந்தை காடின் கோலாக மாற்றினார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலையடைந்தது.
தலையால் முட்டி கோல் அடித்த அட்லெடிகோ அணியின் காடின்
ஆட்டம் முடிவதற்கு 4 நமிடங்கள் இருக்கும் நிலையில் பார்சிலோனா அணிக்கான வெற்றி கோலை மெஸ்சி அடித்தார். சுவாரஸ் கொடுத்த பந்தை மெஸ்சி கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். அப்போது அட்லெடிகோ அணியின் கீப்பர் பந்தை பிடிக்க தவறினார். பந்து மீண்டும் மெஸ்சியிடமே வந்தது. 2-வது முறை மெஸ்சி சரியாக கோல் அடிக்க, பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது.
கோல் அடித்த சந்தோஷத்தில் ரஃ.பினா
இந்த வெற்றியின் மூலம் 24 போட்டிகளின் முடிவில் பார்சிலோனா அணி 54 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
2-வது பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டன. ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ரஃபினா கோல் அடித்தார். லூயிஸ் சுவாரஸ் பாஸ் செய்த பந்தை ரஃபினா கோலாக மாற்றினார்.
கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட சோகத்தி்ல் சுவாரஸ்
இந்த கோல் அடித்த 6-வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் அட்லெடிகோ அணியின் டியாகோ காடின் தலையால் முட்டி கோல் அடித்தார். இடது பக்கம் கார்னர் அருகில் இருந்து கொகே தூக்கியடித்த பந்தை காடின் கோலாக மாற்றினார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலையடைந்தது.
தலையால் முட்டி கோல் அடித்த அட்லெடிகோ அணியின் காடின்
ஆட்டம் முடிவதற்கு 4 நமிடங்கள் இருக்கும் நிலையில் பார்சிலோனா அணிக்கான வெற்றி கோலை மெஸ்சி அடித்தார். சுவாரஸ் கொடுத்த பந்தை மெஸ்சி கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். அப்போது அட்லெடிகோ அணியின் கீப்பர் பந்தை பிடிக்க தவறினார். பந்து மீண்டும் மெஸ்சியிடமே வந்தது. 2-வது முறை மெஸ்சி சரியாக கோல் அடிக்க, பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது.
கோல் அடித்த சந்தோஷத்தில் ரஃ.பினா
இந்த வெற்றியின் மூலம் 24 போட்டிகளின் முடிவில் பார்சிலோனா அணி 54 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X