search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வீரர்களின் போராட்ட குறைபாடு ஏமாற்றம் அளிக்கிறது: சுனில் கவாஸ்கர்
    X

    இந்திய வீரர்களின் போராட்ட குறைபாடு ஏமாற்றம் அளிக்கிறது: சுனில் கவாஸ்கர்

    புனே டெஸ்டில் இந்திய வீரர்களின் போராட்ட குறைபாடு ஏமாற்றம் அளிக்கிறது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
    புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 441 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிச் சென்ற இந்தியா வெறும் 107 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 50 ஓவர் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. சுமார் இரண்டரை நாட்கள் மீதமிருந்த நிலையில் அரைநாளில் சரணடைந்தது.



    இந்த தோல்வி குறித்து முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘இந்திய அணியின் போரட்ட குறைபாடு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை இந்தியா எதிர்கொண்ட ஆட்டம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்திய அணியின் மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்று’’என்றார்.
    Next Story
    ×