என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புனே டெஸ்ட்: இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
Byமாலை மலர்25 Feb 2017 9:53 AM GMT (Updated: 25 Feb 2017 9:53 AM GMT)
புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஓ'கீபே சுழற்பந்தில் சிக்கிய இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புனேவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 260 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 105 ரன்னில் சுருண்டது. ஓ'கீபே 6 விக்கெட்டுக்கள் அள்ளினார்.
பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் (109) சதத்தால் 285 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 440 ரன்கள் முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 441 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 441 ரன்கள் என்பது சுலபமானது அல்ல. இருந்தாலும் மோதிப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். இருவரும் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறினார்கள். விஜய் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஓ'கீபே பந்தில் ஆட்டம் இழந்தார். லோகேஷ் ராகுல் 10 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த புஜாரா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால் விராட் கோலி 13 ரன்கள் எடுத்த நிலையில் ஓ'கீபே பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரகானே (18), அஸ்வின் (8), சகா ஆகியோரை ஓ'கீபே வெளியேற்றினார். 31 ரன்கள் எடுத்த நிலையில் புஜாராவை 6-வது விக்கெட்டாக ஓ'கீபே வெளியெற்றினார். அடுத்து வந்த இசாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ் விக்கெட்டுக்களை லயன் வீழ்த்தி இந்தியா 33.35 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது.
இதனால் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது.
ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி மார்ச் 4-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது.
பின்னர் 155 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் (109) சதத்தால் 285 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 440 ரன்கள் முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 441 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 441 ரன்கள் என்பது சுலபமானது அல்ல. இருந்தாலும் மோதிப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். இருவரும் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறினார்கள். விஜய் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஓ'கீபே பந்தில் ஆட்டம் இழந்தார். லோகேஷ் ராகுல் 10 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த புஜாரா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால் விராட் கோலி 13 ரன்கள் எடுத்த நிலையில் ஓ'கீபே பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரகானே (18), அஸ்வின் (8), சகா ஆகியோரை ஓ'கீபே வெளியேற்றினார். 31 ரன்கள் எடுத்த நிலையில் புஜாராவை 6-வது விக்கெட்டாக ஓ'கீபே வெளியெற்றினார். அடுத்து வந்த இசாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ் விக்கெட்டுக்களை லயன் வீழ்த்தி இந்தியா 33.35 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது.
இதனால் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது.
ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி மார்ச் 4-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X