என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழில்முறை குத்துச்சண்டை: விஜேந்தர் சிங்குடன் மோத இருந்த சீன வீரர் விலகல்
Byமாலை மலர்25 Feb 2017 12:16 AM GMT (Updated: 25 Feb 2017 12:16 AM GMT)
தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் விஜேந்தர் சிங்குடன் மோத இருந்த சீன வீரர் சுல்பிகர் மைமைடியாலி திடீரென விலகி உள்ளார்.
புதுடெல்லி:
தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் விஜேந்தர்சிங், தனது அடுத்த மோதலில் சீன வீரர் சுல்பிகர் மைமைடியாலியை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மோதல் மும்பையில் ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விஜேந்தர் சிங்குடன் மோத இருந்த சுல்பிகர் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். ஆனால் அவரது விலகல் முடிவுக்கு காரணம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை.
போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதே தேதியில் விஜேந்தர்சிங்குடன் வேறு ஒரு வீரரை மோத வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விஜேந்தர்சிங் அளித்த பேட்டியில், ‘இந்த விஷயத்தை நான் நேர்மறையானதாகவே பார்க்கிறேன். சுல்பிகர் என்னுடன் மோதாமல் தவிர்த்ததற்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். எனது அடுத்த போட்டியில் எதிராளி யாராக இருந்தாலும், அவரை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து ஆசிய பசிபிக் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் விஜேந்தர்சிங், தனது அடுத்த மோதலில் சீன வீரர் சுல்பிகர் மைமைடியாலியை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மோதல் மும்பையில் ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விஜேந்தர் சிங்குடன் மோத இருந்த சுல்பிகர் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். ஆனால் அவரது விலகல் முடிவுக்கு காரணம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை.
போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதே தேதியில் விஜேந்தர்சிங்குடன் வேறு ஒரு வீரரை மோத வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விஜேந்தர்சிங் அளித்த பேட்டியில், ‘இந்த விஷயத்தை நான் நேர்மறையானதாகவே பார்க்கிறேன். சுல்பிகர் என்னுடன் மோதாமல் தவிர்த்ததற்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். எனது அடுத்த போட்டியில் எதிராளி யாராக இருந்தாலும், அவரை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X