என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
105 ரன்களில் சுருண்டது இந்திய அணி: 6 விக்கெட்டுகள் சாய்த்தார் ஓ’கீபே
Byமாலை மலர்24 Feb 2017 9:03 AM GMT (Updated: 24 Feb 2017 9:03 AM GMT)
ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 105 ரன்களுக்குள் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
புனே:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்து இருந்தது. மிட்செல் ஸ்டார்க் 57 ரன்னுடனும், ஹேசல்வுட் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டார்க், ஹேசல்வுட் தொடர்ந்து விளையாடினர். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய ஸ்டார்க் அஸ்வின் ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 63 பந்துகளில் 61 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும். இதனால், ஆஸ்திரேலியா அணி முதல்
இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. முரளி விஜய்(10), புஜரா(6), விராட் கோலி(0) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. இதனால் இந்திய அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
இதனையடுத்து லோகேஷ் ராகுலும், ரகானேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் டெஸ்ட் அரங்கில் இரண்டாவது அரை சதத்தை அடித்தார். அணியின் ஸ்கோர் 94-ஆக இருந்த போது லோகேஷ் ராகுல் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து அடுத்த 11 ரன்களுக்குள் மிதமிருந்த 6 வீரர்களும் அடுத்தடுத்து நடையை கட்டினர். இதனால் இந்திய அணி 105 ரன்களுக்குள் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே அபாரமாகபந்து வீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனையடுத்து 155 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. முதல் இடைவெளியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. அஸ்வின் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். தற்போதைக்கு ஆஸ்திரேலிய அணி 201 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X