என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்சிலோனா அணியில் மெஸ்சி மகிழ்ச்சியாக உள்ளார்: அர்ஜென்டினா பயிற்சியாளர்
Byமாலை மலர்23 Feb 2017 11:28 AM GMT (Updated: 23 Feb 2017 11:28 AM GMT)
பார்சிலோனா அணிக்காக விளையாடுவதால் மெஸ்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்று அர்ஜென்டினா நாட்டின் பயிற்சியாளர் எட்கார்டோ பவுசா கூறியுள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி. இவர் பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். இவர் தலைமையில் அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதேபோல் கோபா அமெரிக்கா தொடரிலும் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மெஸ்சி பார்சிலோனா அணியில் மிகவும் சந்தோசமாக விளையாடி வருகிறார் என்று அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் எட்கார்டோ பவுசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எட்கார்டோ பவுசா கூறுகையில் ‘‘தனது குடும்பத்துடன் பார்சிலோனா அணியில் மெஸ்சி எவ்வளவு சந்தோசமாக இருந்து வருகிறார் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. மெஸ்சி மகிழ்ச்சியாக இருக்கும்போது அது அவருடைய சிறந்த ஆட்டத்திற்கு பயனளிக்கிறது. சிறந்த ஆட்டம் நிலைத்து நிற்க மனஉறுதி முக்கியமானது. ஒரு கால்பந்து வீரர் விளையாடும்போது, அணி வெற்றிபெறும்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் 2018 உடன் முடிவடைகிறது. அவர் பார்சிலோனா, மென்செஸ்டர் அல்லது ஏதாவது ஒரு அணியை தேர்ந்தெடுக்கலாம். அதுகுறித்து அவர்தான் முடிவு எடுப்பார். நான் விரும்புவதெல்லாம் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதுதான். அவரைப் போன்ற வீரர்கள் தொடர்ந்து விளையாடத்தான் விரும்புவார்கள். ஒய்வெடுக்க விரும்பமாட்டார்கள்.
அர்ஜென்டினா அணிக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை, உலகின் சிறந்த வீரர் அவர் அல்ல, மிகவும் அபாயகரமான வீரர் இல்லை, மற்ற வீரர்களை ஒப்பிடுகையில் சிறந்தவர் அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் கடின முயற்சியுடன் அடுத்த உலகக்கோப்பையை வெல்ல முயற்சி எடுப்போம். அதன்மூலம் எந்தவொரு நேரத்திலும் அவர்தான் சிறந்த வீரர் என்பதை உருவாக்க முயற்சி செய்வோம்’’ என்றார்.
மெஸ்சி பார்சிலோனா அணியில் மிகவும் சந்தோசமாக விளையாடி வருகிறார் என்று அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் எட்கார்டோ பவுசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எட்கார்டோ பவுசா கூறுகையில் ‘‘தனது குடும்பத்துடன் பார்சிலோனா அணியில் மெஸ்சி எவ்வளவு சந்தோசமாக இருந்து வருகிறார் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. மெஸ்சி மகிழ்ச்சியாக இருக்கும்போது அது அவருடைய சிறந்த ஆட்டத்திற்கு பயனளிக்கிறது. சிறந்த ஆட்டம் நிலைத்து நிற்க மனஉறுதி முக்கியமானது. ஒரு கால்பந்து வீரர் விளையாடும்போது, அணி வெற்றிபெறும்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் 2018 உடன் முடிவடைகிறது. அவர் பார்சிலோனா, மென்செஸ்டர் அல்லது ஏதாவது ஒரு அணியை தேர்ந்தெடுக்கலாம். அதுகுறித்து அவர்தான் முடிவு எடுப்பார். நான் விரும்புவதெல்லாம் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதுதான். அவரைப் போன்ற வீரர்கள் தொடர்ந்து விளையாடத்தான் விரும்புவார்கள். ஒய்வெடுக்க விரும்பமாட்டார்கள்.
அர்ஜென்டினா அணிக்காக அவர் ஒன்றும் செய்யவில்லை, உலகின் சிறந்த வீரர் அவர் அல்ல, மிகவும் அபாயகரமான வீரர் இல்லை, மற்ற வீரர்களை ஒப்பிடுகையில் சிறந்தவர் அல்ல என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் கடின முயற்சியுடன் அடுத்த உலகக்கோப்பையை வெல்ல முயற்சி எடுப்போம். அதன்மூலம் எந்தவொரு நேரத்திலும் அவர்தான் சிறந்த வீரர் என்பதை உருவாக்க முயற்சி செய்வோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X