search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னிப்பு கேட்டதால் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு
    X

    மன்னிப்பு கேட்டதால் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு

    மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் விஜய் ஹசாரே டிராபிக்கான மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    மும்பை கிரிக்கெட் அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தவர் சூர்யகுமார் யாதவ். சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்படவில்லை. இதனால் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக ரீடுவிட் செய்திருந்தார்.

    ஆகவே நாளை மறுநாள் தொடங்கும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. 15 பேர் கொண்ட மும்பை அணியில் 14 பேரை மட்டுமே எம்.சி.ஏ. அறிவித்தது. ஒரு இடத்தை விட்டு வைத்திருந்தது.



    ரீடுவிட் செய்தது குறித்து சூர்யகுமார் யாதவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது தனது தவறுக்கான மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதை மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டதால் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் உன்மேஷ் கன்வில்கர் கூறுகையில் ‘‘மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர், சூர்யகுமார் யாதவின் மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக் கொண்டார். இதனால் விஜய் ஹசாரே போட்டியில் விளையாட அவர் மீதான தடை முடிவுக்கு வந்தது. தலைவருக்கு கடிதம் அனுப்பியதுடன், நேரிலும் சந்தித்து பேசினார்’’ என்றார்.
    Next Story
    ×