search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடைகளைக் கடந்து மீண்டும் வருவேன்: இர்பான் பதான்
    X

    தடைகளைக் கடந்து மீண்டும் வருவேன்: இர்பான் பதான்

    தடைகளைக் கடந்து மீண்டும் விளையாட வருவேன் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
    வதோரா:

    சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானை எந்த அணியும் வாங்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இர்பான் பதானுக்கு ஆதரவாக டுவீட் செய்து அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், என் முன் இருக்கும் தடைகளைக் கடந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவேன் என இர்பான் பதான் தனது ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "2௦1௦-ம் ஆண்டு எனது முதுகில் 5 அறுவைசிகிச்சைகள் செய்து கொண்டேன். அப்போது எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர், ‘நீங்கள் மீண்டும் கிரிக்கெட் விளையாடக் கூடாது. உங்கள் கிரிக்கெட் கனவை கைவிட வேண்டும்’ என கேட்டுக் கொண்டார். அதற்கு நான் ‘என்னால் எந்த வலியையும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்ற வலியை என்னால் தாங்க முடியாது’ என்று கூறினேன்.



    அதேபோல மீண்டும் கடினமாக உழைத்து இந்திய அணியில் இடம் பிடித்தேன். எனது வாழ்க்கையில் எவ்வளவோ தடைகளை சந்தித்து இருக்கிறேன். அதற்காக என்னுடைய முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. இப்போதும் என் முன்னால் ஒரு தடை இருக்கிறது.

    உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளாலும், வாழ்த்துக்களாலும் இந்த தடையைக் கடந்து மீண்டும் வருவேன். தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களிடம் இதனைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

    Next Story
    ×