என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜய் ஹசாரே டிராபியில் ரோகித் சர்மா, டோனி விளையாட வாய்ப்பு
Byமாலை மலர்20 Feb 2017 12:55 PM GMT (Updated: 20 Feb 2017 12:55 PM GMT)
விஜய் ஹசாரே டிராபியில் ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் டோனி ஆகியோர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) விஜய் ஹசாரே. இந்த தொடர் 25-ந்தேதி தொடங்குகிறது.
இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரரான ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது காயம் அடைந்தார். அதற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் அவர் இடம்பெறவில்லை.
தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டுவிட்டாலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் விஜய் ஹசாரே தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியத்தின் இணை செயலாளர் உன்மேஷ் கான்வில்கர் கூறுகையில் ‘‘ரோகித் சர்மாவிடம் இருந்து எந்தவொரு தகவலையும் நாங்கள் பெறவில்லை. இந்த தொடருக்கான மும்பை அணியை அறிவிக்கும் நேரத்தில், தொடரில் விளையாட விருப்பம் குறித்து அவரிடம் கேட்போம்’’ என்றார்.
இதேபோல் ஜார்க்கண்ட் அணியில் டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இல்லை. இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன் பயிற்சியாக எடுத்துக் கொள்ள இந்த தொடரில் டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவியில்லாமல் அவர் தொடர் முழுவதும் தொடர்ந்து விளையாடுவாரா? என்பது சந்தேகம். இதனால் விஜய் ஹசாரே தொடரில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரரான ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது காயம் அடைந்தார். அதற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் அவர் இடம்பெறவில்லை.
தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டுவிட்டாலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதனால் விஜய் ஹசாரே தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியத்தின் இணை செயலாளர் உன்மேஷ் கான்வில்கர் கூறுகையில் ‘‘ரோகித் சர்மாவிடம் இருந்து எந்தவொரு தகவலையும் நாங்கள் பெறவில்லை. இந்த தொடருக்கான மும்பை அணியை அறிவிக்கும் நேரத்தில், தொடரில் விளையாட விருப்பம் குறித்து அவரிடம் கேட்போம்’’ என்றார்.
இதேபோல் ஜார்க்கண்ட் அணியில் டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இல்லை. இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன் பயிற்சியாக எடுத்துக் கொள்ள இந்த தொடரில் டோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவியில்லாமல் அவர் தொடர் முழுவதும் தொடர்ந்து விளையாடுவாரா? என்பது சந்தேகம். இதனால் விஜய் ஹசாரே தொடரில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X