என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்: பென் ஸ்டோக்சை ரூ.14.5 கோடிக்கு வாங்கியது புனே அணி
Byமாலை மலர்20 Feb 2017 5:38 AM GMT (Updated: 20 Feb 2017 5:38 AM GMT)
பெங்களூரில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சை 14.5 கோடி ரூபாய்க்கு புனே அணி ஏலம் எடுத்தது. ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.
பெங்களூர்:
10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ந்தேதி முதல் மே 21–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 43 வெளிநாட்டினர் உள்பட 139 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கழற்றி விடப்பட்டனர்.
அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என்று 130 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவர்கள் ஆவர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.
இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. பவன் நெஹியை பெங்களூர் அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேத்யூசை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பென் ஸ்டோக்சை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் பென் ஸ்டோக்சை புனே அணி ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. மதியம் வரையில் இதுவே அதிகபட்ச ஏலத்தொகையாக இருந்தது.
நிகோலஸ் பூரனை மும்பை இண்டியன்ஸ் 30 லட்சம் ரூபாய்க்கும், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்தன. இதேபோல் கோரி ஆண்டர்சனையும், அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது. நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5–ந்தேதி முதல் மே 21–ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 43 வெளிநாட்டினர் உள்பட 139 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். மற்றவர்கள் கழற்றி விடப்பட்டனர்.
அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என்று 130 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவர்கள் ஆவர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை தொடங்கியது.
இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது. பவன் நெஹியை பெங்களூர் அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேத்யூசை டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனான பென் ஸ்டோக்சை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி இருந்தது. இறுதியில் பென் ஸ்டோக்சை புனே அணி ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. மதியம் வரையில் இதுவே அதிகபட்ச ஏலத்தொகையாக இருந்தது.
நிகோலஸ் பூரனை மும்பை இண்டியன்ஸ் 30 லட்சம் ரூபாய்க்கும், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.5 கோடிக்கும் ஏலம் எடுத்தன. இதேபோல் கோரி ஆண்டர்சனையும், அடிப்படை விலையான 1 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது. நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட்டை 5 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X