என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளையோர் கிரிக்கெட்: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் டிரா
Byமாலை மலர்17 Feb 2017 12:10 AM GMT (Updated: 17 Feb 2017 12:10 AM GMT)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் டிராவில் முடிந்தது.
நாக்பூர்:
19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 501 ரன்களும், இந்தியா 431 ரன்களும் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து 70 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் 167 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் சிஜோமான் ஜோசப் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் 238 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ஆட்ட நேரம் முடிவில் 49 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 92 ரன்கள் (நாட்-அவுட்) விளாசினார். இவ்விரு இளையோர் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் 21-ந் தேதி தொடங்குகிறது.
19 வயதுக்கு உட்பட்ட (இளையோர்) இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 501 ரன்களும், இந்தியா 431 ரன்களும் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து 70 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்து இருந்தது.
இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் 167 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் சிஜோமான் ஜோசப் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் 238 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ஆட்ட நேரம் முடிவில் 49 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 92 ரன்கள் (நாட்-அவுட்) விளாசினார். இவ்விரு இளையோர் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் 21-ந் தேதி தொடங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X