என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றில் இந்திய அணி வெற்றி
Byமாலை மலர்16 Feb 2017 12:11 AM GMT (Updated: 16 Feb 2017 12:11 AM GMT)
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
கொழும்பு:
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இங்கிலாந்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 4 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 4 அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த இந்தியா, இலங்கை, அயர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் முதல் 3 இடங்களை பெற்ற தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. கேப்டன் மிதாலிராஜ் (64 ரன், 85 பந்து, 10 பவுண்டரி), மீஷ்ரம் (55 ரன், 85 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் விளாசினர்.
பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி, இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 156 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் திரிஷா ஷெட்டி 52 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே 4 விக்கெட்டும், எக்தா பிஸ்த் 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்தது.
நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் இந்தியா-வங்காளதேசம், பாகிஸ்தான்-அயர்லாந்து, இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இங்கிலாந்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 4 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 4 அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த இந்தியா, இலங்கை, அயர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் முதல் 3 இடங்களை பெற்ற தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. கேப்டன் மிதாலிராஜ் (64 ரன், 85 பந்து, 10 பவுண்டரி), மீஷ்ரம் (55 ரன், 85 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) அரைசதம் விளாசினர்.
பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி, இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 156 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் திரிஷா ஷெட்டி 52 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே 4 விக்கெட்டும், எக்தா பிஸ்த் 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்தது.
நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் இந்தியா-வங்காளதேசம், பாகிஸ்தான்-அயர்லாந்து, இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X