என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 6-வது வெற்றி
Byமாலை மலர்6 Feb 2017 4:10 AM GMT (Updated: 6 Feb 2017 4:10 AM GMT)
10 அணிகள் பங்கேற்றுள்ள பார்வையற்றோர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் இந்தியா ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது.
ஆமதாபாத் :
10 அணிகள் பங்கேற்றுள்ள பார்வையற்றோர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஒரு லீக்கில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்தியா ரன்வேட்டை நடத்தியது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் 163 ரன்கள் (72 பந்து, 29 பவுண்டரி) திரட்டி கடைசி வரை களத்தில் இருந்தார்.
20 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 272 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் எக்ஸ்டிரா வகையில் கிடைத்த 40 ரன்களே அதிகபட்சமாகும்.
இதன் மூலம் இந்தியா 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. 7-வது லீக்கில் ஆடிய இந்தியாவுக்கு இது 6-வது வெற்றியாகும். 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் இந்தியா ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது.
10 அணிகள் பங்கேற்றுள்ள பார்வையற்றோர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஒரு லீக்கில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்தியா ரன்வேட்டை நடத்தியது. தொடக்க ஆட்டக்காரர் சுனில் 163 ரன்கள் (72 பந்து, 29 பவுண்டரி) திரட்டி கடைசி வரை களத்தில் இருந்தார்.
20 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 272 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் எக்ஸ்டிரா வகையில் கிடைத்த 40 ரன்களே அதிகபட்சமாகும்.
இதன் மூலம் இந்தியா 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. 7-வது லீக்கில் ஆடிய இந்தியாவுக்கு இது 6-வது வெற்றியாகும். 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் இந்தியா ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X