search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை நடாலுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்: ரோஜர் பெடரர்
    X

    ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை நடாலுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்: ரோஜர் பெடரர்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் ரபெல் நடாலை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    மெல்போர்ன் :

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 5 செட் வரை நீடித்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் ரபெல் நடாலை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் இதுவாகும்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு ரோஜர் பெடரர் பேட்டியளித்தார். அப்போது

    ‘டென்னிஸ் ஒரு கடினமான விளையாட்டு. இங்கு டிரா (சமன் செய்வது) என்பது கிடையாது. அப்படி ஒன்று இருந்திருந்தால் இன்றைய ஆட்டத்தில் ரபெல் நடாலுடன் டிரா செய்து மகிழ்ச்சியோடு கோப்பையை பகிர்ந்து கொண்டிருப்பேன்.

    நாங்கள் இருவரும் மீண்டும் ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் ஆடுவோம் என்று நினைக்கவில்லை. அவர் பழைய நிலைக்கு திரும்பி இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையை சொல்கிறேன், இந்த ஆட்டத்தில் தோற்றிருந்தாலும் கூட மகிழ்ச்சி தான் அடைந்திருப்பேன்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×