search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா, இங்கிலாந்து அணியின் மற்றொரு சாதனை
    X

    இந்தியா, இங்கிலாந்து அணியின் மற்றொரு சாதனை

    இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3 ஒரு நாள் தொடரில் மொத்தம் 2090 ரன்கள் குவிக்கப்பட்டது. 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரில் இவ்வளவு அதிகமான ரன் குவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
    இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3 ஒரு நாள் தொடரில் மொத்தம் 2090 ரன்கள் குவிக்கப்பட்டது. 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரில் இவ்வளவு அதிகமான ரன் குவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    ஆப்பிரிக்க- ஆசிய கோப்பையில் 1892 ரன்னும் இதற்கு முன்பு இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 ஒரு நாள் தொடரில் 1884 ரன்னும், குவிக்கப்பட்டு இருந்தன. இந்த 2090 ரன் குவிப்பில் 6 முறையும் 300 ரன்னுக்கு மேல் எடுக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு சராசரியாக 7 ரன் இந்த தொடரில் எடுக்கப்பட்டது.

    இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 1,500 ரன்னை எடுத்தார். இந்த ரன்னை எடுத்த 5-வது வீரர் ஆவார். ரிச்சர்ட்ஸ், பாண்டிங், ஜெயவர்தனே, சங்ககரா ஆகியோர் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 1,500 ரன் எடுத்து இருந்தனர்.
    Next Story
    ×