என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து 32 ஓவரில் 185/2
Byமாலை மலர்22 Jan 2017 10:19 AM GMT (Updated: 22 Jan 2017 10:19 AM GMT)
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 32 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான் நீக்கப்பட்டு ரகானே சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ், ஜோ ரூட் நீக்கப்பட்டு பில்லிங்ஸ், பேர்ஸ்டோவ் சேர்க்கப்பட்டனர்.
தொடக்க வீரர்களாக ராய் மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இங்கிலாந்து அணி 17.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பில்லிங்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து பேர்ஸ்டோவ் களம் இறங்கினார். ராய் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த இரு விக்கெட்டுக்களையும் ஜடேஜா வீழ்த்தினார்.
3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி 32 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 39 ரன்னுடனும், மோர்கன் 36 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தொடக்க வீரர்களாக ராய் மற்றும் பில்லிங்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இங்கிலாந்து அணி 17.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பில்லிங்ஸ் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து பேர்ஸ்டோவ் களம் இறங்கினார். ராய் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த இரு விக்கெட்டுக்களையும் ஜடேஜா வீழ்த்தினார்.
3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து அணி 32 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 39 ரன்னுடனும், மோர்கன் 36 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X