என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி
Byமாலை மலர்21 Jan 2017 10:18 AM GMT (Updated: 21 Jan 2017 10:18 AM GMT)
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டேவிட் மில்லரின் அதிரடியால் தென் ஆப்பிரிக்கா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 3-0 எனக் கைப்பற்றியது.
டெஸ்ட் தொடரை தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று செஞ்சூரியன் நகரில் நடந்தது. மழைக் காரணமாக போட்டி 10 ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 10 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 126 ரன் எடுத்தது. டேவிட் மில்லர் 18 பந்தில் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்சர்களுடன் 40 ரன் எடுத்தார். கேப்டன் பெஹார்டியன் அவுட்டாகாமல் 18 பந்தில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 31 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணியால் 10 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 107 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
டெஸ்ட் தொடரை தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று செஞ்சூரியன் நகரில் நடந்தது. மழைக் காரணமாக போட்டி 10 ஓவராக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 10 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 126 ரன் எடுத்தது. டேவிட் மில்லர் 18 பந்தில் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்சர்களுடன் 40 ரன் எடுத்தார். கேப்டன் பெஹார்டியன் அவுட்டாகாமல் 18 பந்தில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 31 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணியால் 10 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 107 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X