என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா நேவால்
Byமாலை மலர்20 Jan 2017 12:40 PM GMT (Updated: 20 Jan 2017 12:40 PM GMT)
மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாய்னா நேவால் மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தோனேசியாவின் பிட்ரியனியை எதிர்கொண்டார்.
சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த போட்டியில் சாய்னா 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதனையடுத்து சாய்னா தனது அரையிறுதி போட்டியில், ஹாங்காங்கின் யிப் பியி யின்னை எதிர் கொள்ள உள்ளார். யிப் உடன் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் சாய்னா 6-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறார்.
இதனிடையே, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா ஜிண்டிங்கிடம் 21-13, 21-8 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X