search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய நோட்டுக்கள் மட்டுமே வெளியேறியுள்ளன: யுவராஜ், டோனிக்கு வாழ்த்து தெரிவித்த சேவாக்
    X

    பழைய நோட்டுக்கள் மட்டுமே வெளியேறியுள்ளன: யுவராஜ், டோனிக்கு வாழ்த்து தெரிவித்த சேவாக்

    35 வயதை தாண்டிய யுவராஜ் சிங் மற்றும் டோனி இன்று சதம் அடித்து அசத்தினர். இதற்கு சேவாக் தனது பாணியில் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது.

    இந்தியா 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து திணறும்போது, மூத்த வீரர்களான யுவராஜ் சிங் (150), டோனி (134) சதம் அடித்து இந்திய அணியை மீட்டனர்.

    இருவருக்கும் தற்போது 35 வயதை தாண்டியுள்ளது. மூத்த வீரர்கள் சாதிக்க முடியாது என்று கூறப்படுவதை இவர்கள் இருவரும் உடைத்து தள்ளினார்கள். இதை முன்னாள் இந்திய அணியின் அதிரடி வீரர் சேவாக் தனது பாணியில் வாழ்த்தியுள்ளார்.



    இந்தியாவில் சமீபத்தில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ளது. நோட்டுக்கள் மட்டும்தான் தூக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களை தூக்க முடியாது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சேவாக் குறிப்பிட்டுள்ளார். மேலும், யுவாராஜ், டோனி ஆகியோரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×