search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு
    X

    2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு

    இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
    கட்டாக்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பரபாதி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஓட்டலில் அறைகள் கிடைக்காததால் 2 நாட்கள் புனேயிலேயே தங்கி இருந்த இவ்விரு அணி வீரர்களும் நேற்று தான் கட்டாக்குக்கு வருகை தந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் முக்கியப் பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியைப் பொறுத்தவரை உமேஷ் யாதவ்வுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல இங்கிலாந்து அணியில் அடில் ரஷித்துக்குப் பதிலாக பிளங்கெட் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல்:-

    இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), டோனி, யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், புவனேஸ்வர் குமார் ஜஸ்பிரித் பும்ரா.

    இங்கிலாந்து: ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, பிளங்கெட், ஜாக் பால்.
    Next Story
    ×