search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
    X

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

    திருச்சியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    திருச்சி :

    திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கடந்த 30-ந்தேதி நடந்தன. தொடர்ந்து மற்ற பிரிவு போட்டிகள் நேற்று நடந்தன. இதில் டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், நீச்சல், குத்துசண்டை உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

    இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வீரர், வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாலையில் நடந்தது. ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் புண்ணியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×