என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக பிரவீன் மகாஜன் நியமனம்
Byமாலை மலர்2 Dec 2016 4:01 AM GMT (Updated: 2 Dec 2016 4:02 AM GMT)
இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக 62 வயதான பிரவீன் மகாஜன் என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி :
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்த அனில் கண்ணா, அதன் பிறகு 2012-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு வரை அந்த பதவியில் நீடித்தார். மேலும் 4 ஆண்டுகள் தலைவர் பதவியில் தொடரவும் திட்டமிட்டார். இதற்கிடையே, மத்திய அரசின் புதிய விளையாட்டு கொள்கையின் படி, விளையாட்டு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தால், அடுத்த 4 ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும். அதன் அடிப்படையில் பதவியை விட்டு விலகும்படி அனில் கண்ணாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் நெருக்கடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து அனில் கண்ணா பதவியில் இருந்து ஒதுங்கினார்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிர்வாக குழு கூட்டத்தில், இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக பிரவீன் மகாஜன் என்ற பெண் நியமனம் செய்யப்பட்டார். 62 வயதான பிரவீன், முன்னாள் மத்திய வருவாய் துறை உயர் அதிகாரி ஆவார். மத்திய சுங்க மற்றும் கலால்வரி துறையின் தலைவராக இருந்திருக்கிறார். ஜோத்பூரில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உறுப்பினராகவும் தற்போது இருக்கிறார். இந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைவராக ஒரு பெண் செயல்பட இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1955-ம் ஆண்டு முதல் 1959-ம் ஆண்டு வரை ராஜ்குமாரி, தலைவர் பதவியை அலங்கரித்து இருக்கிறார்.
அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி டென்னிஸ் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் 2020-ம் ஆண்டு வரை பதவியில் தொடரும் வகையில் புதிய தலைவர் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.
அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொதுச் செயலாளராக தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்த அனில் கண்ணா, அதன் பிறகு 2012-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு வரை அந்த பதவியில் நீடித்தார். மேலும் 4 ஆண்டுகள் தலைவர் பதவியில் தொடரவும் திட்டமிட்டார். இதற்கிடையே, மத்திய அரசின் புதிய விளையாட்டு கொள்கையின் படி, விளையாட்டு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தால், அடுத்த 4 ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும். அதன் அடிப்படையில் பதவியை விட்டு விலகும்படி அனில் கண்ணாவுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் நெருக்கடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து அனில் கண்ணா பதவியில் இருந்து ஒதுங்கினார்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிர்வாக குழு கூட்டத்தில், இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக பிரவீன் மகாஜன் என்ற பெண் நியமனம் செய்யப்பட்டார். 62 வயதான பிரவீன், முன்னாள் மத்திய வருவாய் துறை உயர் அதிகாரி ஆவார். மத்திய சுங்க மற்றும் கலால்வரி துறையின் தலைவராக இருந்திருக்கிறார். ஜோத்பூரில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உறுப்பினராகவும் தற்போது இருக்கிறார். இந்திய டென்னிஸ் சங்கத்தின் தலைவராக ஒரு பெண் செயல்பட இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1955-ம் ஆண்டு முதல் 1959-ம் ஆண்டு வரை ராஜ்குமாரி, தலைவர் பதவியை அலங்கரித்து இருக்கிறார்.
அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி டென்னிஸ் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் 2020-ம் ஆண்டு வரை பதவியில் தொடரும் வகையில் புதிய தலைவர் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X