என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: சேலம் பள்ளி அணி சாம்பியன்
Byமாலை மலர்8 Nov 2016 2:11 AM GMT (Updated: 8 Nov 2016 2:11 AM GMT)
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சேலம் பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
பொள்ளாச்சி :
மேல்நிலைப்பள்ளி மாணவர் களுக்கு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி விளையாட்டுத்துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், 10 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதி போட்டியில் சேலம் கோகுல்நாதா மேல்நிலைப்பள்ளியும், சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியும் மோதின.
இதில், 50:34 என்ற புள்ளிக்கணக்கில் சேலம் கோகுல்நாதா மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது இடத்தை சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியும், 3-வது இடத்தை திருநெல்வேலி எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியும், 4-வது இடத்தை பொள்ளாச்சி பி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் பிடித்தன.
இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கல்லூரி பொருளாளர் சிவகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு என்.ஜி.எம். சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அசோக் குமார் செய்திருந்தார்.
மேல்நிலைப்பள்ளி மாணவர் களுக்கு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி விளையாட்டுத்துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், 10 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதி போட்டியில் சேலம் கோகுல்நாதா மேல்நிலைப்பள்ளியும், சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியும் மோதின.
இதில், 50:34 என்ற புள்ளிக்கணக்கில் சேலம் கோகுல்நாதா மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது இடத்தை சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியும், 3-வது இடத்தை திருநெல்வேலி எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியும், 4-வது இடத்தை பொள்ளாச்சி பி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் பிடித்தன.
இதையடுத்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கல்லூரி பொருளாளர் சிவகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு என்.ஜி.எம். சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அசோக் குமார் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X