search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் குஸ்னெட்சோவா
    X

    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரை இறுதியில் குஸ்னெட்சோவா

    சிங்கப்பூரில் நடந்து வரும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குஸ்னெட்சோவா அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    சிங்கப்பூர் :

    சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் அவர்கள் ரெட், ஒயிட் என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ‘ஒயிட்’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா) 3-6, 6-2, 7-6 (6) என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) தோற்கடித்தார். இந்த ‘திரில்’ வெற்றியை பெற அவர் 2 மணி 17 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. 2-வது வெற்றியை பதிவு செய்த குஸ்னெட்சோவா அரைஇறுதியை உறுதி செய்திருக்கிறார்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 7-6 (1), 6-3 என்ற நேர் செட்டில் கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தினார். தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்த பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான முகுருஜா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார். கடைசி லீக்கில் ராட்வன்ஸ்கா- பிளிஸ்கோவா மோதுகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் இந்த பிரிவில் இருந்து 2-வது வீராங்கனையாக அரைஇறுதிக்கு முன்னேறுவார்.
    Next Story
    ×