search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையிடம் வீழ்ந்தது கொல்கத்தா
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையிடம் வீழ்ந்தது கொல்கத்தா

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
    கொல்கத்தா:

    3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு கொல்கத்தாவில் அரங்கேறிய 23-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தா- மும்பை சிட்டி எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இரு அணிகளும் சம அளவில் கோல் வாய்ப்புகளை உருவாக்கின. என்றாலும் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை. பிற்பாதியில் வியூகங்களை மாற்றி விளையாடினர். 71-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் இயான் ஹூமே அடித்த அதிரடியான ஷாட்டை, மும்பை கோல் கீப்பர் அல்பினோ கோம்ப்ஸ் ‘டைவ்’ அடித்து தடுத்தார்.

    79-வது நிமிடத்தில் மும்பை வீரர் சோனி நார்டே இடதுபுறத்தில் இருந்து எதிரணியின் இரு வீரர்களை ஏமாற்றி சக வீரர் டியாகோ பார்லனிடம் (உருகுவே) தட்டி விட்டார். அவர் அதே வேகத்தில் இடது காலின் மூலம் ஓங்கி உதைக்க, பந்து கோல் கீப்பரின் கையில் பட்டு கம்பத்துக்குள் புகுந்தது. அதுவே வெற்றி கோலாகவும் மாறியது. முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இதன் மூலம் 11 புள்ளிகளுடன் (3 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) மும்பை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணி 9 புள்ளிகளுடன்(2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி) 3-வது இடத்தில் இருக்கிறது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். 
    Next Story
    ×