search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்காள தேச அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் சேர்ப்பு
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வங்காள தேச அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் சேர்ப்பு

    இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டிற்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    வங்காள தேசம் - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது மற்றும் கடைசி போட்டி 28-ந்தேதி தொடங்கியது. இதற்கான வங்காள தேச அணி அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடும் லெவனில் விளையாடிய ஷபியூல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார். மொசட்டெக் ஹொசைன், சபாஷிஸ் ரேய் ஆகிய இரண்டு புதுமுக வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது போட்டிக்கான வங்காள தேச அணி வீரர்கள் விவரம்:-

    1. முஷ்பிகுர் ரஹிம் (கேப்டன்). 2. தமீம் இக்பால், 3. சவுமியா சர்கார், 4. இம்ருல் கெய்ஸ், 5. மொமினுல் ஹக்யூ. 6. மெஹ்முதுல்லா, 7. சாஹிப் அல் ஹசன், 8. ஷுவகடா ஹோம், 9. சபீர் ரஹ்மான், 10. மெஹெதி ஹசன், 11. தைஜூல் இஸ்லாம், 12. கம்ருல் இஸ்லாம் ரபி, 13. மொசட்டெட் ஹொசைன், 14. நருல் ஹசன், 15. சுபாஷிஸ் ராய்.
    Next Story
    ×