என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லோதா - பி.சி.சி.ஐ. இடையே சமரசம் ஏற்படும் வரை ஐ.பி.எல். ஒளிபரப்பு ஏலம் தள்ளிப்போக வாய்ப்பு
Byமாலை மலர்24 Oct 2016 1:38 PM GMT (Updated: 24 Oct 2016 1:38 PM GMT)
லோதா - பி.சி.சி.ஐ. இடையே சமரசம் ஏற்படும் வரை ஐ.பி.எல். தொடருக்கான ஒளிபரப்பு டெண்டர் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
லோதா கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்ற பி.சி.சி.ஐ. தயக்கம் காட்டி வருகிறது. இதனால் கடந்த 21-ந்தேதி லோதா கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து அனுராக் தாகூர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நாளை ஐ.பி.எல். தொடரை ஒளிப்பரப்பும் உரிமத்திற்கான டெண்டர் திறக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் மீடியா ஒளிபரப்பபு உரிமத்திற்கு டுவிட்டர், பேஸ்புக் உள்பட 18 நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெற்றுள்ளன.
நாளை டெண்டர் திறக்கப்படும் என்பதால், தற்போதைய நிலையில் இதற்கு பிரச்சினை ஏதும் வருமா? என்று பி.சி.சி.ஐ. தரப்பில் லோதா கமிட்டியிடம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு லோதா கமிட்டி அளித்த பதிலில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி லோதா கமிட்டி பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்று கடிதம் கொடுத்தால் டெண்டருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் டெண்டர் நடைமுறை தள்ளிப்போகும் அளவிற்கு எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று பி.சி.சி.ஐ, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் மீண்டும் லோதா - பி.சி.சி.ஐ.-க்கு இடையே யுத்தம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நாளை ஐ.பி.எல். தொடரை ஒளிப்பரப்பும் உரிமத்திற்கான டெண்டர் திறக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் மீடியா ஒளிபரப்பபு உரிமத்திற்கு டுவிட்டர், பேஸ்புக் உள்பட 18 நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெற்றுள்ளன.
நாளை டெண்டர் திறக்கப்படும் என்பதால், தற்போதைய நிலையில் இதற்கு பிரச்சினை ஏதும் வருமா? என்று பி.சி.சி.ஐ. தரப்பில் லோதா கமிட்டியிடம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு லோதா கமிட்டி அளித்த பதிலில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி லோதா கமிட்டி பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்று கடிதம் கொடுத்தால் டெண்டருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் டெண்டர் நடைமுறை தள்ளிப்போகும் அளவிற்கு எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று பி.சி.சி.ஐ, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் மீண்டும் லோதா - பி.சி.சி.ஐ.-க்கு இடையே யுத்தம் நடைபெற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X