search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட்: சீனியர் வீரர்களின் ஓய்வு தொடர்கிறது- இந்திய அணியில் மாற்றமில்லை
    X

    கடைசி இரண்டு ஒருநாள் கிரிக்கெட்: சீனியர் வீரர்களின் ஓய்வு தொடர்கிறது- இந்திய அணியில் மாற்றமில்லை

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்களின் ஓய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரெய்னா நீக்கப்பட்டுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    இந்த தொடருக்கான முதல் மூன்று போட்டிக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் சீனியர் வீரர்களான அஸ்வின், ஜடேஜா, மொகமது ஷமி போன்றோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. காய்ச்சல் காரணமாக ரெய்னா மூன்று போட்டிகளிலும் இடம்பெறவில்லை.

    இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து காய்ச்சல் சரியாகாததால் ரெய்னா நீக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 14 பேர் அணியில் அப்படியே நீடிக்கிறார்கள். சீனியர் வீரர்கள் அஸ்வின், ஜடேஜா மற்றும் மொகமது ஷமி ஆகியோரின் ஓய்வும் நீடிக்கிறது.

    நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1. டோனி (கேப்டன்), 2. ரோகித் சர்மா, 3. ரகானே, 4. விராட் கோலி, 5. மணீஷ் பாண்டே, 6. ஹர்திக் பாண்டியா, 7. அக்சார் பட்டேல், 8. ஜெயந்த் ஜாதவ், 9. அமித் மிஸ்ரா, 10. புமப்ரா, 11. தவால் குல்கர்னி, 12 உமேஷ் யாதவ், 13. மந்தீப் சிங், 14. கேதர் ஜாதவ்.

    4-வது ஒருநாள் போட்டி 26-ந்தேதி ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி 29-ம் தேதி விசாகப்பட்டினத்திலும் நடைபெறுகிறது.
    Next Story
    ×